பக்கம் எண் :

பக்கம் எண்:279

உரை
 
3. மகத காண்டம்
 
17. இரவெழுந்தது
 
           உறுவிலை கொண்டு பெறுவிலை பிழையா
           வெண்பூந் துகிலுஞ் செம்பூங் கச்சும்
           சுரிகையும் வாளு முருவொடு புணர்ந்த
           அணியின ராகிப் பணிசெயற் குரிய
     130    இளையரை யொற்றித் தளைபிணி யுறீஇப்
 
                     (இதுவுமது)
              126 - 130 : உறு ......... உறீஇ
 
(பொழிப்புரை) மிக்க விலையினைக் கொண்டு தாம் பெறுகின்ற விலைக்குக் குறையாத வெண்பூந்துகிலும் செம்பூங்கச்சும் உடை வாளும் பெரு வாளும் அணிந்த அழகோடு சேர்ந்த ஒப்பனையையுடையராய் அக் கூட்டத்தில் தொழில் செய்தற்குரிய இளையரை ஆராய்ந்து நியமித்துக் கொண்டு நன்கு பொருள்களைக் கட்டி; என்க.
 
(விளக்கம்) உறு - மிகுதி. விலைபிழையா - விலைப்பொருளுக்குக் குறையாத என்க. சுரிகை - உடைவாள். உரு - வடிவம். வெள்ளைத் துகிலும் செம்பூங்கச்சும் அணிந்துகொண்டு உடைவாளும், வாளும் கட்டிய இடையினராய் ஆகிய வடிவத்தோடு என்க. ஒற்றி - ஆராய்ந்துணர்ந்து. தளைபிணியுறீஇ - பொருட்களை நன்றாகக் கட்டி.