பக்கம் எண் :

பக்கம் எண்:281

உரை
 
3. மகத காண்டம்
 
17. இரவெழுந்தது
 
           முதிர்பழ மிளகு மெதிர்வது திகழ்ந்த
           மஞ்சளு மிஞ்சியுஞ் செஞ்சிறு கடுகும்
           தலைப்பெருங் காயமு நலத்தகு சிறப்பிற்
           சீரகத் தரிசியு மேலமு மேனைக்
     145    காயமு மெல்லா மாய்வன ரடக்கி
 
                  (உண் பொருள்கள்)
              141 - 145 : முதிர் ......... அடக்கி
 
(பொழிப்புரை) முதிர்ந்த மிளகுப் பழமும், முற்றிய ஒளி திகழ்ந்த மஞ்சளும், இஞ்சியும், சிவந்த சிறுகடுகும், சிறந்த பெருங்காயமும், நன்மைமிக்க சிறப்பினையுடைய சீரகத்து அரிசியும், ஏலமும், பிற காயங்களும், ஆகிய எல்லாவற்றையும் ஆராய்ந்த பைகளில் அடக்கிக்கொண்டு;என்க
 
(விளக்கம்) முதிர்ந்த பழமாகிய மிளகு என்க. காயம் - கறிக்கிடு பொருள்கள். ஆய்வனர் - ஆராய்ந்து.