பக்கம் எண் :

பக்கம் எண்:286

உரை
 
3. மகத காண்டம்
 
17. இரவெழுந்தது
 
           காட்சிமுந் துறுத்த மாட்சிய ராகிப்
           படைத்திற மன்னர் பாடி சார்ந்து
           விடைப்பே ரமைச்சன் மேனாட் போக்கிய
           அறிவொடு புணர்ந்த விசைச்சனு மவ்வழிக்
     180    குறிவயிற் பிழையாது குதிரையொடு தோன்றலும்
 
                     (இதுவுமது)
             176 - 180 : காட்சி ......... தோன்றலும்
 
(பொழிப்புரை) தம்மைக் காண்போர் விரும்பி வந்து காணுமாறு  காட்சியை முன்னிட்டுக் கொண்ட மாண்புடையராகிப் படைகளோடிருக்கும் பகை மன்னர் தம் பாசறையை எய்தினராக; அப்பொழுது இடபகன் என்னும் அமைச்சன் முன்னாள் உய்த்த பேரறிவுடைய இசைச்சனும் தங்களுடைய குறிப்பின்கண் தவறாத பல குதிரையொடு வந்து சேர; என்க.
 
(விளக்கம்) மன்னர் : பகைமன்னர். பாடி - பாசறை. விடைப் பேரமைச்சன் : இடபகன். இசைச்சன் - உதயணனுடைய பார்ப்பனத் தோழன்..