உரை |
|
3. மகத காண்டம் |
|
17. இரவெழுந்தது |
|
210 மண்டில மறைந்த
மயங்கிருள்
யாமத்
தெண்டிசை மருங்கினு மின்னுழி
யெறிதுமென்
றறியச் சூழ்ந்த குறியின ராகி
|
|
(உதயணனுடைய
வீரர் இரவிற் போர்
புரிதல்) 210
- 212 : மண்டில ......... ஆகி
|
|
(பொழிப்புரை) ஞாயிற்று மண்டிலம் மறைந்த இருள் மயங்கிய
நள்ளிரவின்கண் எட்டுத் திசைகளினும் வைத்து இப் பகைவரை இன்னின்ன இடத்திலே
தாக்குவேம் என்று தம்முள் எல்லோரும் அறியும்படி ஆராய்ந்து துணிந்த துணிவினை
உடையவராய்; என்க.
|
|
(விளக்கம்) மண்டிலம் - ஞாயிற்று மண்டிலம். இருள் மயங்கு
யாமம் என்றது நள்ளிரவினை. எறிதும் - தாக்குவேம்; கொல்லுவேம்
எனினுமாம்.
|