உரை |
|
3. மகத காண்டம் |
|
17. இரவெழுந்தது |
|
வேலிற் சாய்த்துங் கோல
மான்றேர்
அடவி வாழ்கென வார்த்தன
ருராஅய்த்
தடவரை மார்பிற் றளராச் செங்கோல்
235 மிலைச்சன் வாழ்கெனத் தலைக்காப்
பிருந்த
தண்ட மள்ளரைத் தபுத்துயி ருண்டும்
|
|
(இதுவுமது)
232 - 236 : கோலம் ......... உண்டும்
|
|
(பொழிப்புரை) அழகிய குதிரை பூண்ட தேரையுடைய அடவி மன்னன்
வாழ்க என்று ஆரவாரித்தவராய்ச் சென்று பெரிய மலை போன்ற மார்பினையுடையவனும், தளராத
செங்கோலையுடையவனும், ஆகிய மிலைச்சன் என்பான் வாழ்க! என்று, தலைக் காவலாக
இருந்த அவன் படை வீர ரைக் கொன்று உயிருண்டும்; என்க.
|
|
(விளக்கம்) அடவி - ஓர் அரசன். அடவி வாழ்க என்று
மிலைச்சன் மல்லரை உயிருண்டு என்க. தலைக் காப்பு - முதன்மையான காவல் : மெய்க்
காவலுமாம்.
|