உரை |
|
3. மகத காண்டம் |
|
17. இரவெழுந்தது |
|
கொண்ட வார்ப்பொடு கூட
வெலிச்செவி
பண்டரும் பல்லியம் பாற்படத் துவைத்தும் |
|
(இதுவுமது) 237
- 238 : கொண்ட ......... துவைத்தும் |
|
(பொழிப்புரை) எலிச் செவியரசன் வாழ்க! என்று
மேற்கொண்ட ஆரவாரத்தோடு கூட இசை தருகின்ற பல்வேறு இசைக் கருவிகளை இசைக்
கூறுகள் தோன்ற இயக்கி அயோத்தியரசன்! படைஞரைக் கொன்றும்;
என்க. |
|
(விளக்கம்) கொண்ட ஆர்ப்பு - மேற்கொண்ட ஆரவாரம்.
அயோத்தி யரசன் பெயர் இங்கே கூறப்படாமையின் எலிச் செவியரசன் வாழ்க என்று அவனது
முரசினை முழக்கி அயோத்தி யரசன் படைஞரைக் கொன்று; என்க. எலிச் செவி -
எலிச்செவியரசன். பல்லியம் - பலவாகிய இசைக் கருவி. பால் - பகுதி; இசைப் பகுதி
என்க. |