பக்கம் எண் :

பக்கம் எண்:306

உரை
 
3. மகத காண்டம்
 
18. தருசகனோடு கூடியது
 
           போக்கிய பின்றையவன் புனைநகர் வீதியுட்
           கேட்போர்க் கெல்லாம் வேட்கை யுடைத்தா
           மறைத்த லின்றி மறுகுதோ றறைய
 
                  (வயந்தகன் செயல்)
              31 - 33 : அவன் ......... அறைய
 
(பொழிப்புரை) அதுகேட்ட வயந்தகன் அங்ஙனமே ஒப்பனை செய்யப்பட்ட அவ்விராசகிரிய நகரத்தின் வீதியினுள்ளே சென்று ஆங்குக் கேட்கும் நகர மாந்தர்க்கெல்லாம் பெரிதும் வேட்கையுண்டாகும்படி இச் செய்தியை வெளிப்படையாக அவ்வீதிகளிலெல்லாம் கூறி அறிவியா நிற்ப; என்க.
 
(விளக்கம்) அவன் : வயந்தகன். முதல் நாள் அச்சுவப் பெருமகனை எதிர் கொள்ளற் பொருட்டு அணி செய்யப்பட்டமையின் ஆசிரியர் அந் நினைவால் 'புனைநகர் வீதி' என்றார். மறைத்தலின்றி - வெளிப்படையாக. மறுகு - வீதி.