பக்கம் எண் :

பக்கம் எண்:313

உரை
 
3. மகத காண்டம்
 
18. தருசகனோடு கூடியது
 
           வானுய ருலகம் வழுக்குபு வீழ்ந்த
           தேனுயர் நறுந்தார்த் திறலோன் போலத்
     80    தோழர் சூழ வேழ மேல்கொண்
           டுதையண குமரன் புகுதர வோடிச்
 
                  (இதுவுமது)
              78 - 81 : வான் ......... புகுதர
 
(பொழிப்புரை) வானத்தின்கண் அமைந்த தேவருலகத்தினின்றும் வழுக்கி விழுந்த தேன்மிக்க நறிய மலர் மாலை யணிந்த ஒரு தேவனைப்போல உதயணகுமரன் தன் தோழராகிய உருமண்ணுவா  முதலியோர் தன்னைச் சூழ்ந்துவர அத் தருசக மன்னன் உய்த்த யானையின் மேல் ஏறி வாராநிற்ப ; என்க.
 
(விளக்கம்) வானுயருலகம் - மேனிலையுலகம். வழுக்குபு -  வழுக்கி. திறலோன் : ஒரு தேவன். தோழர் : உருமண்ணுவா முதலியோர். வேழம் - தருசகன் உய்த்த யானை.