பக்கம் எண் :

பக்கம் எண்:314

உரை
 
3. மகத காண்டம்
 
18. தருசகனோடு கூடியது
 
           டுதையண குமரன் புகுதர வோடிச்
           சிதைபொரு டெரியுஞ் செந்நெறி யாளர்
           கடல்கண் டன்ன வடலருந் தானையை
           இனைய கூட்டமொ டெண்ணா தகம்புக்கு
     85    வினைமேம் பட்ட வென்றி வேந்தனைத்
           தெளிவது தீதெனச் சேர்ந்துசென் றிசைப்ப
 
             (சிலர் தருசகனைத் தடுத்தல்)
               81 - 86 : ஓடி..........இசைப்ப
 
(பொழிப்புரை) அப்பொழுது உண்மை சிதைந்துபோன பொருளை ஆராய்ந்து அறியும் செவ்விய நெறியை மேற்கொண்டுள்ள தருசகன் அமைச்சர்களுள் வைத்து ஒரு சிலர் விரைந்து சென்று அம் மன்னனை எய்தி, ''ந்தே ! கடல்போன்ற வெல்லுதற்கரிய பெரும் படையினை யுடையோய் ! நீ எதிர்வரும் இக் கூட்டத்தை இத்தகைய கூட்டமென்று ஆராய்ந்துணராமல் அக் கூட்டத்தினுட் புகுந்து ஆட்சித் தொழிலில் மேம்பட்டவனும் வெற்றியை யுடையவனும் ஆகிய வேற்று வேந்தனை இவ்வாறு தெளிந்துகொள்ளுதல் தீங்கு பயக்கு'' மென்று கூறாநிற்ப; என்க.
 
(விளக்கம்) செந்நெறியாளர் ஓடிச் சென்று சேர்ந்து இசைப்ப என்க. ஓடி - விரைந்து. சிதை பொருள் - உண்மை சிதைந்து போன பொருள். செந்நெறியாளர் : அமைச்சர். தானையை - படையையுடையாய். இனைய - இத்தகைய. வேந்தன்: உதயணன்.