(விளக்கம்) தானும் - அவ்வுதயணனும். அவனும் - அத்தருசகனும், வழியில் இறங்கித்
தழுவிக்கொண்டு அளவளாவிய பின்னர் மீண்டும் தத்தம் ஊர்தியில் வந்தார் என்பது
தோன்ற 'தானத்திழிந்து' என்றார்.அணித்தக - அழகுற. தொன்று - பண்டு. ஆற்ற -
மிகவும். அளைஇ - அளவளாவி ; உதயணன் பொருட்டுப் பள்ளி மாடமொடு கோயிலும் பாற்படுத்து
என்க. எள்ளி - இகழ்ந்து. வேந்தன் - தருசகன். புகீஇ -புகுந்து. விருப்பின்
வாயிலுளொழிந்து தீரான் என மாறுக
18.
தருசகனொடு கூடியது முற்றிற்று.
|