பக்கம் எண் :

பக்கம் எண்:326

உரை
 
3. மகத காண்டம்
 
19. படை தலைக்கொண்டது
 
            விருத்தி காரரும் வேண்டியது பெறூஉம்
           உரத்தகை யாளரு மொருங்குவந் தீண்டுக
           செருச்செய வலித்தனன் செல்வன் சென்றெனத்
     60    தானை யணியத் தலைத்தா ளணியுள்
           யானை யேற்றி யணிமுர சறைதலும்
 
                   (இதுவுமது)
            57 - 61 : விருத்தி.........அறைதலும்
 
(பொழிப்புரை) விருத்திகாரரும் அவ்வப்போது தாம் வேண்டிய பொருளைப் பெற்றுக் கொள்ளும் போர் மறவரும் ஒரு சேர ஈண்டு வந்து கூடுவீராக; நம்மரசன் பகை மன்னர் மேற்சென்று போர் செய்யத் துணிந்தனன் என்று கூறிப் படைகளை அணி வகுக்கும்படி முன்னின்ற படையணியின்கண் யானையின் மேல் வள்ளுவர் அழகிய முரசினை ஏற்றி அறைதலாலே; என்க.
 
(விளக்கம்) விருத்திகாரர் - போர் செய்தற் பொருட்டு அரசனளித்த சீவிதம் பெற்றிருக்கும் மறவர். வேண்டியது பெறூஉம் உரத்தகையாளரென்றது - கூலிபெறும் மறவரை. செல்வன் - அரசன். வலித்தனன் - துணிந்தனன். தலைத்தாளணி - முதல் படையணி. வள்ளுவர் அறைதலும்; என்க.