பக்கம் எண் :

பக்கம் எண்:332

உரை
 
3. மகத காண்டம்
 
19. படை தலைக்கொண்டது
 
           வாயன் றாயினும் வந்துகண் ணுற்றோர்
           மேவ வுரைக்கும் மேதகு வாக்கியம்
           வல்ல னாகிய வயந்தக குமரன்
           செல்வன் றலைத்தாட் சென்றுகண் ணெய்தி
     105    இறைவன் மாற்றமுங் குறையுங் கூற
 
                 (வயந்தகன் செயல்)
                 101 - 105 : வாய்.........கூற
 
(பொழிப்புரை) அப்பணி பெற்றவுடனே உண்மையன்றாயினும் தன்பால் வந்து கேட்போர் அம்மொழி மெய்ம்மையே என்று விரும்பி ஏற்றுக்கொள்ளும்படி பேசுகின்ற மேம்பாடுடைய சொல் வன்மையையுடைய அவ் வயந்தக குமரன் அத் தருசகன் திருமுன்னர்ச்சென்று இடம் பெற்றுத் தன் அரசனாகிய உதயணனுடைய மொழியையும் வேண்டுகோளையும் கூறாநிற்ப; என்க.
 
(விளக்கம்) வாய் - உண்மை. மேவ - விரும்ப. மேதகுவாக்கியம் - மேம்பட்ட தகுதியையுடைய மொழி. செல்வன் - தருசகன். தலைத்தாள் - முன்னிலை. கண்ணெய்தி - இடம்பெற்று. இறைவன் - உதயணன். குறை - வேண்டுகோள்.