பக்கம் எண் :

பக்கம் எண்:334

உரை
 
3. மகத காண்டம்
 
19. படை தலைக்கொண்டது
 
           அருஞ்சின யானையும் புரவியு மமைந்த
     115    இருஞ்சின விளையரும் வருகென வேவி
 
                    (இதுவுமது)
            114 - 115 : அருஞ்சின.........ஏவி
 
(பொழிப்புரை) அம் மன்னர் பெருமான் அப்பொழுதே கிட்டுதற்கரிய வெகுளியையுடைய நம் யானைப் படைகளும் குதிரைப் படைகளும் போர்க்குத் தகுதியான பெரிய வெகுளியையுடைய இளமையையுடைய காலாட் படைஞரும் வருக! என்று ஏவலர்களை விட; என்க.
 
(விளக்கம்) யானை - யானைப் படை. புரவி - குதிரைப் படை. இளையர் - காலாட்படை