உரை |
|
3. மகத காண்டம் |
|
19. படை தலைக்கொண்டது |
|
125 கேகயத்
தரசனுங் கிளந்துபல
வெண்ணிக்
காவல் வேந்தனைக் கண்டுகை
கூப்பி
வானோர் பெரும்படை வந்த
தாயினும்
யானே யமையு மடிக
ளென்னை
விடுத்தற் பாற்றென வெடுத்தவ னிசைப்பத்
|
|
(இதுவுமது)
125 - 129 : கேகயத்.........இசைப்ப
|
|
(பொழிப்புரை) அம் மன்னவன் தருசகன் பால் வந்து கை
கூப்பி வணங்கிப் ''பெருமானே ! நினக்குப் பகையாக வந்த இச் சங்க மன்னர்கள் கிடக்க,
வானுலகத்துள்ள தேவர்களினது பெரிய படையே நின்மேல் போர்க்கு வந்ததாயினும் யான்
ஒருவனே அவர்களை யெல்லாம் வெல்லுதற்கு அமையும்,'' ஆதலால், ''அடிகள், பகைவர் பால்
என்னையே யேவுக !'' என்று அவன் எடுத்துக் கூறா நிற்ப ;
என்க.
|
|
(விளக்கம்) கிளந்து - வெளிப்படையாகச் சொல்லி. காவல்
வேந்தனை - தருசகனை. அடிகள் : விளி. அவன் - அவ்வச்சுவப்
பெருமகன்.
|