பக்கம் எண் :

பக்கம் எண்:342

உரை
 
3. மகத காண்டம்
 
19. படை தலைக்கொண்டது
 
            கோயின் முற்றத் துய்த்தலின் வாய்மொழி
           உதயணன் றன்மாட் டுய்க்க விவற்றொடு
           பொருபடைக் குதவும் புரவியும் புரவியொடு
     180    செருவமர் மாந்தருஞ் செல்க விரைந்தென
           ஒன்னா ரோட்டிய வுதயணன் கோயிற்
           பொன்னார் முற்றம் புகுந்துடன் றுவன்ற
 
                      (குதிரை முதலியன)
               177 - 182 : வாய்மொழி.........துவன்ற
 
(பொழிப்புரை) அது கண்ட தருசகன் அம்மறவர்களை நோக்கி இந்த யானைப் படைகளை வாய்மையாளனாகிய உதயண மன்னன் பால் செலுத்துவீராக ! இந்த யானைகளோடு போர்செய்யும் படைகளுக்கு உதவுகின்ற குதிரைகளும் குதிரையில் ஏறிப் போர் செய்யும் மறவர்களும். விரைந்து செல்க ! என்று கட்டளையிடுதலாலே  அப்படைகளெல்லாம் பகைவர்களைப் புறங்கண்ட அவ்வுதயணமன்னன் எழுந்தருளியிருக்கும் அரண்மனையின் பொற்றளமிட்ட  முற்றத்தின்கண் புகுந்து ஒருங்கே நெருங்காநிற்ப ; என்க.
 
(விளக்கம்) பொருபடை, வினைத்தொகை. புரவியொடு செருவமர் மாந்தர் - குதிரைப் படை மறவர். துவன்ற - நெருங்க.