உரை |
|
3. மகத காண்டம் |
|
3. இராசகிரியம் புக்க |
|
25 பொறிநிலை
யமைந்த போர்ப்பெருங்
கதவிற்
செறிநிலை யமைந்த சித்திரப்
புதவின்
யாப்புற வமைத்த வாய்ப்புடைப்
பணதி
வல்லோர் வகுத்த செல்வக் கூட்டத்
தாய்நலக் கம்மத் தழகொடு
புணர்ந்து 30 தீயழற் செல்வன்
செலவுமிசை
தவிர்க்கும்
வாயின் மாடத் தாய்நல வணிமுகத |
|
(இதுவுமது) 25 - 31 :
பொறி.........முகத்து |
|
(பொழிப்புரை) பொறியையுடைய
நிலையோடு பொருந்திய பொருத்து -வாயுடைய பெரிய இரட்டைக் கதவுகளும்,
அப்பெருங் கதவின்கண்ணே செறித்துச் செய்யப்பட்ட- சித்திரத்
தொழிலையுடைய சிறு கதவுகளும் ஆகிய உறுதியாக அமைக்கப்பட்ட பொருத்தமான
அணிகலன்களையும் வல்லவர்களாலே இயற்றப்பட்ட பிறசெல்வத்
தொகுதியோடே நுண்ணிய நன்மையுடைய தொழில் அழகோடு கூடி உயர்ந்து ஞாயிற்று
மண்டிலத்தின் இயக்கத்தையும் தவிர்க்கின்ற கோபுரம் என்னும்
ஆராய்தற்குரிய நன்மையுடைய அழகிய முகத்தையும் என்க. |
|
(விளக்கம்) பொறி-இயந்திரம்;இலச்சினையுமாம், போர்-பொருத்தல்- செறிநிலை யமைந்த
சித்திரப் புதவு என்றது பெருங்கதவின்கண் அமைக்கப்பட்ட சிறுகதவுகளை.
புதவு-கதவு, பணதி-அணிகலன், இதனைப் பணிதி என்றும் வழங்குப. தீயழற்
செல்வன்-ஞாயிறு, வாயின்மாடம்-கோபுரம், பெருங்கதவும் புதவும்
ஆகிய பணதியையும் வாயின் மாடமாகிய முகத்தையும் என்க. |