உரை |
|
3. மகத காண்டம் |
|
20. சங்கமன்னர் உடைந்தது |
|
வலிகெழு நோன்றாள் வத்தவ
மன்னற்குத் தருசகன்
றங்கை தகையேர் சாயற் 180 பத்திப்
பைம்பூட் பதுமா
நங்கை தக்கனள்
கொடுப்பின் மிக்கதென் போரும்
|
|
(வேறு சிலர்
கூற்று) 178
- 181 : வலி...............என்போரும்
|
|
(பொழிப்புரை) இனி, வேறுசிலர், ''வலிமை பொருந்திய முயற்சியையுடைய இந்த வத்தவ
மன்னனுக்கு நம் மன்னவன் தருசகனுடைய தங்கையாகிய பெருந்தகைமையும் அழகும் சாயலும்
நிரல்பட்ட பசிய அணிகலன்களுமுடைய பதுமாபதி நங்கையே கோப்பெருந்தேவியாதற்குத்
தகுந்தவள் ; ஆதலின், நம்மன்னன் அவளை இவனுக்கு மணம் செய்து கொடுப்பின் மிக மிக
நன்றாகும்,'' என்று கூறுவோரும் ; என்க.
|
|
(விளக்கம்) தாள் - முயற்சி. தகை - பெருந்தகைமை; அழகுமாம். ஏர் - அழகு ;
எழுச்சியுமாம். சாயல் - மென்மை. பதுமா - பதுமை; பதுமாபதி. நங்கை -
மகளிருட்சிறந்தோள். கொடுப்பின் மணம் செய்விப்பின். மிக்கது -
சிறந்தது.
|