பக்கம் எண் :

பக்கம் எண்:373

உரை
 
3. மகத காண்டம்
 
20. சங்கமன்னர் உடைந்தது
 
          வேண்டி வந்த வேந்தனும் வீய்ந்தனன்
          ஈண்டினி யிவற்கே யியைந்த பால்வகை
          ஆலு முண்டஃ தறிவோர் யாரென
    185    வாயின் மிகுத்து வலித்துரைப் போரும்
 
                     (இதுவுமது)
          182 - 185 : வேண்டி...............உரைப்போரும்
 
(பொழிப்புரை) அதுகேட்ட வேறுசிலர் ''ஆம் ஆம், நுங்கருத்து நன்றே ! அப்பதுமாபதியை மணந்து கோடற்கு விரும்பி வந்த அச்சுவப்பெருமகனும் போர்க்களத்தே இறந்தொழிந்தான். இனி, இங்கு நுங்கருத்தின் படியே இப்பெருமகனுடைய ஆகூழ் இருத்தலும் கூடும். அவ்வூழினையாரே யறிய வல்லார்!'' என்று தத்தம் வாய் வந்தனவெல்லாம் வலிந்து கூறுவோரும் ; என்க.
 
(விளக்கம்) வேண்டிவந்த வேந்தன் : கேகய மன்னன். வீய்ந்தனன் - இறந்தனன். இவற்கு : உதயணனுக்கு. பால் - ஆகூழ். வாயடக்கமின்றி மனம் போனபடி மிகையாகப் பேசும் பொது மக்களியல்பினை எடுத்துக் காட்டுவார் 'வாயின் மிகுத்து வலித்துரைப்போரும்' என்றார்.