உரை |
|
3. மகத காண்டம் |
|
21. மகட்கொடை வலித்தது |
|
வாழ்வது வலியாள் சூழ்வன ளிருப்ப
அரும்பொரு ணாவி னமைச்சன்
சேதியர் 45 பெரும்பெய ரண்ணலைப்
பொருந்துபு வணங்கிக்
காவலன் கருதிய கட்டுரை
யுணர்தி
பூவலர் தாரோய் புனைகழ
னோன்றாள்
எம்மிறை மாற்ற மிசைப்பேன்
யானெனத்
தன்னமர் தோழரொடு மன்னவன்
கேட்பப்
|
|
(அமைச்சன் உதயணன்பாற் சென்றுதருசகன்
கருத்தை
அறிவித்தல்)
44 - 49 : அரும்பொருள்.........கேட்ப |
|
(பொழிப்புரை) உணர்தற்கரிய நுண்பொருள்களையும்
ஆராய்ந்து உணர்த்தும் செந்நாவினையுடைய அவ்வமைச்சன் சேதிநாட்டினர் மன்னனாகிய
பெரும்புகழையுடைய அவ்வுதயணனை யெய்திக் கைகூப்பி வணங்கி ''மலர்விரிந்த
மாலையினையுடையோய் ! வீரக்கழல் கட்டிய வலிய முயற்சியினையுடைய எங்களரசன் கூறிய
மொழியினைக் கொணர்ந்துள்ளேன்; அவற்றை யான் கூறுவேன்: வேந்தே! எம்மரசன் கருதிக்
கூறிய பொருள் பொதிந்த மொழிகளைத் திருச்செவி ஏற்றருளுக'' என்று கூறி அவ்வுதயணன்
தன்னை விரும்பும் உருமண்ணுவா முதலிய தோழரோடு ஒருங்கிருந்து கேட்பக் கூறுபவன்;
என்க.
|
|
(விளக்கம்) அரும்பொருள் - உணர்தற்கரிய நுண் பொருள்
சேதியரண்ணல்: உதயணன். காவலன் : தருசகன். கட்டுரை - பொருள் பொதிந்த மொழி.
எம்மிறை - எங்களரசன். மன்னவன் :
உதயணன்.
|