உரை |
|
3. மகத காண்டம் |
|
21. மகட்கொடை வலித்தது |
|
அலகைப் பல்லுயிர்க் கச்ச
நீக்குநர்
கவலை கொண்டுதங் காவலிற்
றளரின் உலக
மெல்லா நிலைதளர்ந் தழியும்
|
|
(இதுவுமது)
57 - 59: அலகை ......... அழியும் |
|
(பொழிப்புரை) ''பெருமானே! அளவு கடந்த பலவாகிய
உயிர்கட்கெல்லாம் துன்பத்தால் வரும் அச்சத்தைப் போக்கிப் பாதுகாப்போராகிய
அரசர்களே கவலைகொண்டு தங்காவற்றொழிலிற் றளர்ந்தால் இவ்வுலகில் வாழும்
மன்னுயிரெல்லாம் நிலைதளர்ந்து அழிந்துபோம் அல்லவோ''
என்க. |
|
(விளக்கம்) அலகை - அளவு, அளவிறந்த பல்லுயிரென்க.
நீக்குநராகிய அரசரே என்க. காவல்-உயிர்களைக் காக்குந் தொழில், உலகம் -
உயிரினங்கள் : ஆகுபெயர். |