பக்கம் எண் :

பக்கம் எண்:392

உரை
 
3. மகத காண்டம்
 
22. பதுமாபதி வதுவை
 
            உவந்த மனத்தி னிகழ்ந்ததை மதியாக்
            கொடுக்குங் கேண்மை கோமகன் புரிய
 
                    (தருசகன் மகிழ்தல்)
                   8 - 9: உவந்த.........புரிய
 
(பொழிப்புரை) அம் மொழி கேட்ட கோமகன் பெரிதும் மகிழ்ந்த தன் மனத்தின்கண் அந்நிகழ்ச்சியை நன்கு மதித்துப் பதுமாபதியை அவ்வுதயணனுக்கு மணம் புணர்க்கும் உறவினைப் பெரிதும் விரும்பா நிற்ப ; என்க.
 
(விளக்கம்) கொடுக்குங் கேண்மை - கொடுத்தலாலுண்டாகும் உறவு. கோமகன் : தருசகன். புரிய - விரும்ப.