உரை |
|
3. மகத காண்டம் |
|
22. பதுமாபதி வதுவை |
|
வயந்தக குமரனு நயந்தது நன்றென
30 இன்னொலிக் கழற்கான் மன்னனைக்
குறுகிப்
பொருத்தம் படவவ னுரைத்ததை யுணர்த்தலின் |
|
(வயந்தகன் தருசகன்பாற் சென்று
கூறல்) 29
- 31 : வயந்தக.........உணர்த்தலின் |
|
(பொழிப்புரை) அப்பணி பெற்ற வயந்தக குமரனும், ''இறை மகனே!
நீ விரும்பியது மிகவும் நன்று'' என்று உதயணனைப் பாராட்டிக் கூறி இனிய ஒலியினையுடைய
வீரக்கழ லணிந்த காலையுடைய தருசகமன்னனின்பாற் சென்று உதயணன் கூறியதனை அம்மன்னன்
நெஞ்சிற்கு நன்கு பொருந்தும்படி அறிவித்தலாலே; என்க. |
|
(விளக்கம்) நயந்தது - இசைச்சனுக்கு மணம் புரிவிக்க வேண்டு
மென்று விரும்பியது. மன்னன் : தருசகன். அவன் :
உதயணன். |