(விளக்கம்) காவலனாகிய பெருமகன் என்க. மாணகனாகிய
பார்ப்பன உரு என்க. குடிப்பிறந்தார் நெஞ்சம் ஒப்புழியல்ல தோடாதென்பது ஒரு கொள்கை.
இதனை,
''ஏகு நல்வழி யவ்வழி
யென்மனம் ஆகு
மோவதற் காகிய
காரணம் பாகு
போன்மொழிப் பைந்தொடி
கன்னியே ஆகும்
வேறிதற் கையுற வில்லையே'' (கம்ப. மிதிலை. 127.)
என்னும்
இச்செய்யுளிடத்தும் காண்க. நன்னலத் தோன்றல் - நன்ன லத்திற்குரிய தோன்றல்.
அவட்கொண்டு - அவ்விடத்தேயுட் கொண்டு. உறைத்தலூற்றம் - உறைத்தற்குரிய
ஊற்றம். |