உரை |
|
3. மகத காண்டம் |
|
22. பதுமாபதி வதுவை |
|
மன்னவ
னுரைத்த மாற்றமு மன்னவன் 155
தன்னொப் பாகிய தகைநலப்
பாவையும்
கொண்டனள் போகிக் கோமகட்
குறுகி
வண்டலர் படலை வத்தவன்
வடிவிற்
பாவை காட்டிப் பைங்கொடி
யிதுநம்
ஆய்பூங் காவி னந்தண வுருவொடு
160 கரந்துநலங் கவர்ந்த காவலன்
வடிவெனத்
|
|
(யாப்பியாயினி
செயல்) 154
- 160 ; மன்னவன்.........வடிவென
|
|
(பொழிப்புரை) அதுகேட்ட யாப்பியாயினி அவ்வுதயணன் கூறிய
மொழியையும் அவன் வரைந்துதந்த அவனைப்போன்ற அழகிய நன்மையமைந்த ஓவியத்தையும்
கொண்டு சென்று அக்கோமகளையணுகி வண்டுகள் மொய்க்கின்ற மலர்ந்த படலைமாலை அணிந்த
உதயணகுமரனுடைய அவ்வோவியத்தைப் பதுமாபதிக்குக் காட்டிப் ''பசிய பூங்கொடிபோல்
வோய் ! இவ்வுருவம் நம்முடைய அழகிய பூம்பொழிலிலே பார்ப்பன வேடத்தோடு தன்
உண்மையுருவத்தை மறைத்துக்கொண்டுவந்து உன்னு டைய பெண்மை நலம் முழுவதையும்
கவர்ந்துகொண்டுபோன உதயண மன்னனுடைய உருவங்காண்!'' என்று உணர்த்தாநிற்ப ;
என்க.
|
|
(விளக்கம்) மன்னவன் : உதயணன். மாற்றம் - மொழி, பாவை :
ஓவியப் பாவை. கோமகள் : பதுமாபதி. படலை - தளிர் விரவித் தொடுத்த மாலை.
அந்தணவுருவொடு - பார்ப்பன வடிவத்தோடு. காவலன் :
உதயணன்.
|