பக்கம் எண் :

பக்கம் எண்:424

உரை
 
3. மகத காண்டம்
 
22. பதுமாபதி வதுவை
 
            ஓங்கிய பெரும்புக ழுதயண குமரனைத்
      240    தாங்கருந் தோழர் தாம்புனைந் தணியக்
            கடிநாட் கோலத்துக் காம னிவனென
            நெடுநகர் மாந்தர் நெஞ்சந் தெளியக்
            காட்சிக் கமைந்த மாட்சி யெய்த
 
             (உதயணனைக் கோலஞ் செய்தல்)
               239 - 243 : ஓங்கிய.........எய்த
 
(பொழிப்புரை) இனி, உயர்ந்த பெரிய புகழையுடைய உதயண குமரனையும் அவனுடைய தோழர்கள் தம்முடைய ஒப்பனைத் திறத்தினாலே அணிசெய்து அழகின்மேல் அழகு செய்யாநிற்றலால் அவனைக் கண்ட மாந்தர்கள் மணக் கோலஞ் செய்து கொண்ட காமவேளே இவன் என்று துணியும்படி காட்சிக்குப் பொருந்திய மாட்சிமையுடையானாக; என்க.
 
(விளக்கம்) தோழர் - வயந்தகன் முதலியோர். கடிநாட்கோலத்துக் காமன் - திருமணக் கோலத்தோடு தோன்றிய காமவேள்.