உரை |
|
3. மகத காண்டம் |
|
22. பதுமாபதி வதுவை |
|
புதுமலர்க் கோதைப் பூந்தொடிப்
பணைத்தோட்
பதுமா நங்கையைப் பண்புணப்
பேணி
மணநல மகளிர் மரபிற்
கொத்தவை
துணைநல மகளிரொடு துன்னிய காதல்
270 மூதறி மகளிர் முடித்த பின்றை |
|
(இதுவுமது)
266 - 270 : புது.........பின்றை |
|
(பொழிப்புரை) புதிய மலர்மாலையையும் பொலிவுடைய தொடியினையும்
பருத்த தோளையுமுடைய பதுமாபதி நங்கையைப் பழைமையை யறிந்த மங்கலமகளிர் பண்போடு
பேணித்தம் மரபிற்குப் பொருந்திய செயல்களைத் தமக்குத் துணையாகிய அழகிய மகளிரொடும்
செறிந்த காதலோடும் செய்து முடித்த பின்னர், என்க. |
|
(விளக்கம்) பண்பு உணப்பேணி - அவளுடைய நற்பண்பு தம்
நெஞ்சத்தைப் பருகும்படி பேணி என்க. மணநலமகளிர் - மங்கல மகளிர். மூதறி மகளிர்-பழைய
வழக்கங்களை யுணர்ந்த மகளிர்கள். |