(விளக்கம்) அன்பாலே தலைவன் தலைவியர் இருவரும் ஒருமையுற்று
இயற்றும் இன்ப வாழ்க்கைக்குப் பொருந்தியதும் அறத்தையே விரும்பும் ஒழுக்கத்தையும்
உடைய காவிதிமாக்கள் என்க. காவிதிமாக்கள் - காவிதிப்பட்டம் பெற்ற மகளிர்.
படுத்தனர் - மலர் முதலியவற்றைப் பரப்பினர்.
22. பதுமாபதி வதுவை முற்றிற்று. |