உரை |
|
3. மகத காண்டம் |
|
24. மேல்வீழ் வலித்தது |
|
இருமண மெய்திய வின்ப
மெல்லாம்
உருமண் ணுவாவினை யுற்றதற்
பின்னை
ஐம்முந் நாளி னவனைச் சிறைவிடுத்
30 தெம்முன் னாகத் தருதனின்
கடனென
அமைச்சன் பெருமையு மரசன
தார்வமும்
மனத்தி னுவந்து மகதவர்
கோமான்
அதுவொருப் பட்டாங் ககன்ற
பின்னர் |
|
(உதயணன் தருசகன்
பாற்
கூறுதல்)
27 - 33 : இருமணம் ......... பின்னர்
|
|
(பொழிப்புரை) ''மைத்துன! யான் பதுமாபதியின் பெரிய மண வாயிலாய்
அடைந்த இன்பமெல்லாம் என் அமைச்சனாகிய உருமண்ணுவாவைப் பகைவர் கையினின்றும்
மீட்டுக் கொண்ட பின்னரே உண்மையான இன்பம் ஆகும்; ஆதலின் இன்னும் பதினைந்து
நாள்களினுள்ளே அவ்வமைச்சனைச் சிறை வீடு செய்து என் முன்னிலையிலே கொணர்ந்து விடுதல்
நினது பெருங்கடமை யாகும்'' என்று கூறா நிற்ப; அது கேட்ட தருசக மன்னன் உருமண்ணுவாவினது
பெருமையினையும் அவன்பால் உதயணன் கொண்டுள்ள அன்பினையும் அறிந்து தன்
நெஞ்சத்தின்கண் பெரிதும் மகிழ்ந்து, ''அங்ஙனமே செய்வே'' னென்று அச்செயலுக்கு
உடன்பட்டுக் கூறி நீங்கிய பின்னர் ; என்க.
|
|
(விளக்கம்) இருமணம் - பெரிய மணம். உருமண்ணுவா
சிறைப்பட்டிருக்கும் பொழுது யான் எய்தும் இன்பமெல்லாம் இன்பமாக மாட்டா என்று
உணர்த்திய படியாம். ஐம்முந்நாள் - பதினைந்து நாள். அவனை : உருமண்ணுவாவை. அமைச்சன்
: உருமண்ணுவா. புரந்தான் கண்ணீர் மல்குதலின் அவ்வமைச்சன் பெருமை தருசகனுக்குப்
புலனாயிற்று என்க. அரசன் : உதயணன். கோமான் : தருசகன். அது -
அவ்வேண்டுகோளை.
|