உரை |
|
3. மகத காண்டம் |
|
24. மேல்வீழ் வலித்தது |
|
மள்ளரொடு புணர்ந்த மாண்பிற்
றாகிக் கள்ளரொடு
புணர்ந்த கட்டரண் குறுகிப்
போர்மேற் கொண்ட புகற்சியன்
புரவலன்
ஆர்மேற் போங்கொ லஞ்சுதக
வுடைத்தெனச் 45 சேனை மன்னர்
சிந்தையுட் டேம்ப
வலிப்பது தெரிய வொலித்துடன்
குழீஇ
விட்டன னிருந்த காலை யொட்டிய
|
|
(இதுவுமது)
41 -47 : மள்ளர் ......... காலை |
|
(பொழிப்புரை) இங்ஙனமாக எழுந்து சென்ற படை மறவர்களோடு கூடிய
மாண்புடையதாய் ஆறலை கள்வரோடு கூடிய காவலையுடைய அரண்களை எய்தி அவ்வரண்களிலுள்ள
படைகளையுடைய மன்னர்கள், ''இவ்வத்தவ வேந்தன் இப்பொழுது போரை மேற்கொள்ளுதற்குக்
காரணமான விருப்பத்தையுடையவனாய் இங்ஙனம் படை கூட்டிச் செல்கின்றான்; இவன் எவ்வரசன்
மேலே செல்வனோ? இந்நிகழ்ச்சி நம்மால் பெரிதும் அஞ்சத் தகுந்த தொன்றாக
இருக்கின்றது'' என்று தம் நெஞ்சினுள்ளே தேம்பாநிற்பவும், தான் துணிந்த செயலைப் பிற
மன்னர் தெளிந்து கொள்ளும்படியும் தன்படையுடன் ஆரவாரித்து ஓரிடத்தே கூடி அம்மன்னன்
தங்கியிருந்தபொழுது, என்க. |
|
(விளக்கம்) மள்ளர் - மறவர். கள்ளர்-ஆறலைக் கள்வர்.
கட்டரண் - காவலையுடைய அரண். புகற்சியன் - விருப்பமுடையன். புரவலன்; உதயணன்.
சேனைமன்னர் என்றது அங்குள்ள குறுநில மன்னரை. விட்டனன் - படையைத்
தங்கவிட்டு. |