உரை |
|
3. மகத காண்டம் |
|
24. மேல்வீழ் வலித்தது |
|
விட்டன னிருந்த காலை
யொட்டிய
எழுச்சி வேண்டி யூகி
விட்ட
அருமறை யோலை யாய்ந்தன னடக்கி
50 வரிமலர்ப் படலை வயந்தக
னுரைக்கும்
|
|
(தம்பியருடைய
வரவை வயந்தகன்
கூறல்)
47 - 50 : ஒட்டிய.........உரைக்கும்
|
|
(பொழிப்புரை) தன்னோடு தொடர்புள்ள இப்படையெழுச்சியை விரும்பிய
யூகி, விடுத்த அறிதற்கரிய மறையினையுடைய ஓலையை வயந்தகன் ஆராய்ந்துணர்ந்து தன்னுள்
அடக்கிக் கொண்டு அழகிய மலர்விரவிய படலை மாலையையுடைய அவ்வயந்தகன் உதயணனுக்குக்
கூறுவான்; என்க.
|
|
(விளக்கம்) ஒட்டிய - தொடர்புடைய. எழுச்சியை விரும்பி
என்க. அருமறை - அறிதற்கரிய மறைச்செய்தி. படலை - ஒருவகை
மாலை.
|