பக்கம் எண் :

பக்கம் எண்:468

உரை
 
3. மகத காண்டம்
 
25. அரசமைச்சு
 
          குறும்புழை யெல்லாங் கூடெழுக் கொளீஇச்
          செறிந்த பல்படை யறிந்தவ ணடக்கி
          வாயின் மாடமொடு நாயி லுள்வழி
     15    இரவும் பகலு மிகழாக் காப்பொடு
          முரவுந் தூம்பு முழங்குபு துவைப்ப
 
                    (இதுவுமது)
            12 - 16 : குறும்புழை.........துவைப்ப
 
(பொழிப்புரை) ''குறும்புழைகட்கிடையே சுவர் எழுப்பிக் கூட்டி நிரம்பிய பலவாகிய படைக்கலன்களை யெல்லாம் ஆராய்ந்து அவ்விடங்களிலே அடக்கி வைத்துக் கோபுரவாயிலும் ஞாயிலும் இருக்குமிடமெல்லாம் இரவும் பகலும் விழிப்புடைய காவலர்களை அமைத்து வைத்து முரசும் பெருவங்கியமும் முழங்கி ஆரவாரியாநிற்ப; என்க.
 
(விளக்கம்) குறும்புழை - சிறுவாயில். கூடு - இடைவெளியை மறைத்துக் கூட்டும் சுவர். பல்படை - பல்வேறு படைக்கலம். வாயின் மாடம் - கோபுரம். முரவு - முரசு. தூம்பு - பெருவங்கியம். துவைப்ப - ஆரவாரிப்ப.