உரை |
|
3. மகத காண்டம் |
|
25. அரசமைச்சு |
|
165 எல்லிருள் விடுப்ப வெழுந்தனன்
போகி வஞ்சச்
சூழ்ச்சி வருட காரன்
தன்சொல் லெல்லாஞ் சென்றவ னுரைப்பக்
|
|
(சேனாபதி
மகன் ஆருணியிடம் சென்று அறிவித்தல்)
165 - 167 : எல்லிருள்.........உரைப்ப
|
|
(பொழிப்புரை) அச்சேனாபதி மகனை அவ்விரவிலேயே ஏவா நிற்ப அவனும்
விரைந்துபோய்த் தன்பால் வஞ்சகச் சூழ்ச்சியையுடைய அவ்வருடகாரன் கூறிய
மொழியெல்லாம் வாய்மையென்றே கருதி அவ்வாருணி மன்னன்பாற் சென்று கூறாநிற்ப;
என்க.
|
|
(விளக்கம்) எல்லிருள் - இரவிருள். ஆருணி மன்னன்பாற் சென்று
என்க.
|