(விளக்கம்) ''ஆகூழாற் றோன்று மசைவின்மை கைப்பொருள்
போகூழாற் றோன்று மடி'' (குறள். 371)
''பேதைப்படுக்கு மிழவூ ழறிவகற்று மாகலூ ழுற்றக்
கடை'' (குறள். 372)
என்னும் பொன்மொழிகட்கிணங்க
ஆராய்ந்து துணியவேண்டிய அம்மன்னவன் கெடலூழ் தலைப்பட்டிருத்தலின் கேட்டபொழுதே ஆராயாது
தெளிந்தனன் என்றார். முகன் - முகக்குறிப்பு. முன்னியது - கருதிய காரியம். சகுனி
கௌசிகன் : ஓரொற்றன். ஒட்டா மன்னன் - பகை மன்னன். நட்டானாகி - நண்பு
செய்தவனாய். நாட்ட - நிலை நிறுத்த. இவன் - இச்சேனாபதி
மகன்.
|