பக்கம் எண் :

பக்கம் எண்:489

உரை
 
3. மகத காண்டம்
 
25. அரசமைச்சு
 
          சென்றவற் காட்டி............
          ஒன்றிய கருமத் துள்பொரு ளெல்லாம்
    180    சென்றறிந் தின்னும் வம்மி னீரென
          நன்றறி வாளர் நால்வரைப் பணிப்ப
          அருளிய தெல்லா மாகென வடிபணிந்
          திருளிடைப் போந்தவற் குறுகினர் மறைந்தென்.
 
                   (இதுவுமது)
          178 - 183 : சென்றவன்.........மறைந்தென்
 
(பொழிப்புரை) தன்பால் வந்தவனாகிய அச்சேனாபதி மகனை அச்சகுனி கௌசிகனுக்குக் காட்டி........................அச்சகுனி கௌசிகனோடு வேறு மூவரையும் சேர்த்து '.நீவிர் நால்வரும் இவனுடன் சென்று நம் பகைவர் மேற்கொண்டுள்ள செயலின்கண் நாம் அறிதற்கு வேண்டிய பொருளையெல்லாம் நீவிர் நம் பகைப் புலத்திற்சென்று இன்னும் நன்று அறிந்து வாருங்கோள்!'' என்று பணிப்ப, அதுகேட்ட அந் நன்றறிவாளர் நால்வரும் ''எம்பெருமான் அருளியதெல்லாம் ஆகுக'' என்று அம்மன்னனுடைய திருவடிகளைப் பணிந்து மாறுவேடங் கொண்டு அவ்விருளினூடே சென்று அவ்வருடகாரனையடைந்தனர்; என்க.
 
(விளக்கம்) சென்றவன் : தன்பால் வந்த சேனாபதி. நால்வர் - சகுனி கௌசிகனும் வேறு மூவரும். அருளியதெல்லாம் - கட்டளையிட்ட  காரியமெல்லாம். அவன் : வருடகாரன். மறைந்து - மாறுவேடங்கொண்டு.

                     25. அரசமைச்சு முற்றிற்று.