உரை |
|
3. மகத காண்டம் |
|
26. பாஞ்சாலராயன் போதரவு |
|
நிறைநீ
ரகவயிற் பிறழுங் கெண்டையைச்
சிறுசிர லெறியுஞ் செய்கை
போல உறுபுக
ழுதயணன் றறுகண் மறவர்
பற்றுபு கொண்டுதங் கொற்றவற் காட்ட
|
|
(மறவர்
செயல்)
21 - 24
: நிறைநீ ......... காட்ட
|
|
(பொழிப்புரை) அக்கட்டளையை மேற்கொண்ட மிக்க புகழையுடைய உதயணனுடைய
அஞ்சாமையையுடைய அம்மறவர்கள் அப்பொழுதே சென்று நிறைந்த வெள்ளத்தின்கண் நீரினுள்ளே
பிறழாநின்ற கெண்டைமீனைச் சிறிய மீன்கொத்தும் குருவி, காலால் எறிந்து எடுக்கும்
செயல்போல அத்தூதுவரை எளிதாகப் பற்றிக் கொணர்ந்து தம்மரசனுக்குக் காட்டா நிற்ப;
என்க.
|
|
(விளக்கம்) நிறைநீர் - வெள்ளம். சிரல் - மீன்கொத்தும் குருவி. உறுபுகழ் -
மிக்கபுகழ். தறுகண் - அஞ்சாமை. பற்றுபு - பற்றி. கொற்றவன் :
உதயணன்.
|