உரை |
|
3. மகத காண்டம் |
|
26. பாஞ்சாலராயன் போதரவு |
|
25 இடவகன் கையு ளிருக்க
விவரெனத்
தடவரை மார்பன் றலைத்தா ளுய்ப்ப
|
|
(உதயணன்
செயல்) 25
- 26 : இடவகன் ........ உய்ப்ப
|
|
(பொழிப்புரை) அத்தூதுவரைக் கண்ட பெரியமலை போன்ற மார்பினையுடைய உதயணன்
இத்தூதுவர் இடவகன் கையகத்தே இருப்பாராக என்று அம்மறவருக்குக் கூறி அவ்விடவகன்
முன்னிலையில் அவரைச் செலுத்தாநிற்ப; என்க.
|
|
(விளக்கம்) கையுள் இருக்க என்றது அவன் பார்வையில் இருப்பாராக என்றவாறு.
மார்பன் ; உதயணன். தலைத்தாள் :
முன்னிலை.
|