பக்கம் எண் :

பக்கம் எண்:498

உரை
 
3. மகத காண்டம்
 
26. பாஞ்சாலராயன் போதரவு
 
         
     40    மறஞ்சால் பெரும்படை வருட காரனும்
           அறஞ்சால் கெண்ணிய தவப்பட் டதுவெனக்
           கைவிரல் பிசைந்து செய்வதை யறியான்
           வந்தோர் தெளிய நொந்தன னுவல
 
                 (வருடகாரனது நடிப்பு)
              40 - 43 : மறஞ்சால் ......... நுவல
 
(பொழிப்புரை) (பொழிப்புரை) இந்நிகழ்ச்சியை உணர்ந்து கொண்டு வீரமிக்க பெரிய படையையுடைய அவ்வருடகாரனும் ஆருணிமன்னனிடத்திலிருந்து தன் பால் வந்த பகைப் புலத்தார் தன்னை ஐயுறாமல் தெளிந்து கொள்ளும் பொருட்டு, ''அந்தோ! அறம் சிறக்க ! யாம் நினைத்த காரியம் கெட்டொழிந்தது'' என்று கூறித் தன் கைவிரல்களைப் பிசைந்து கொண்டு இனிச் செய்வது என்ன என்று தெரியாது திகைப்பான் போன்றும் பெரிதும் மனம் நொந்தவன் போன்றும் கூறா நிற்ப; என்க.
 
(விளக்கம்) அறம் சால்க - தருமம் சிறக்க. என்னுமிது அப்பகைவர் தான் செய்யும் செயலெல்லாம் அறத்தின்பாற் பட்டன என்று கருதுதற் பொருட்டென்க. அவப்பட்டது - வீணாகிவிட்டது. வந்தோர் - ஆருணியினிடத்திருந்து வந்தவர். நுவல - கூறா நிற்ப.