பக்கம் எண் :

பக்கம் எண்:504

உரை
 
3. மகத காண்டம்
 
26. பாஞ்சாலராயன் போதரவு
 
           அடக்கருஞ் சீற்றத் தாருணி கழலடி
           வடுத்தீர் வருடகன் வணங்கினன் காண
 
                 (வருடகாரன் செயல்)
              86 - 87 : அடக்கரும்.........காண
 
(பொழிப்புரை) குற்றமற்ற வருடகாரன் அம்மன்னனுக்கு எதிர்சென்று அடக்குதற்கரிய சினத்தையுடைய அந்த ஆருணி மன்னனுடைய வீரக்கழல்கட்டிய அடிகளிலே வீழ்ந்துவணங்கி அம் மன்னனைக் காணாநிற்ப ; என்க.
 
(விளக்கம்) சீற்றத்து - சினத்தையுடைய. கழலடி - கழல்கட்டிய அடி. வடு - குற்றம். வருடகன் - வருடகாரன்.