பக்கம் எண் :

பக்கம் எண்:506

உரை
 
3. மகத காண்டம்
 
26. பாஞ்சாலராயன் போதரவு
 
           காணமும் வழங்கி நாணா டோறும்
           ஊனிடை யறாமை யுணாத்தந் திடூஉம்
           சேனை வாணிகஞ் செறியக் காக்கென
 
                      (இதுவுமது)
              96 - 98 : நாணாள்.........காக்கென
 
(பொழிப்புரை) அம்மன்னவன், ''அமைச்சனே ! நீ நாள்தோறும் நம்படைகளுக்கு ஊன் இடையறவின்றிச் சிறந்த உணவுகளை விலைக்குக் கொடுக்கும் தொழிலை உறுதியாகப் பேணிவருக'' என்றும் அறிவுறுத்தியபின், என்க.
 
(விளக்கம்) இடையறாது ஊன்விரவிய உணா என்றவாறு. உணா - உணவு. விலைக்குத் தந்திடும் என்க. காக்க - பேணுக.