பக்கம் எண் :

பக்கம் எண்:51

உரை
 
3. மகத காண்டம்
 
4. புறத்தொடுங்கியது
 
           இட்டிகைப் படுகாற் குட்டக் கோணத்
           துத்தர மருங்கி னத்தினஞ் சொரிந்த
           மணிதெளித் தன்ன வணிநிறத் தெண்ணீர்ப்
     40    பெருந்தண் பொய்கை மருங்கிற் குலாஅய்ச்
 
                 (பொய்கை)
         37-40 ; இட்டிகை............குலாஅய்
 
(பொழிப்புரை) வடகிழக்குத் திசையிலே செங்கல்லானியன்ற
  படிக்கட்டுகளோடு ஆழமானதும் சங்கீன்ற முத்தினைக் கரைத்துத்
  தெளியவைத்தாற்போன்ற அழகிய நிறத்தையுடைய தெளிந்த நீர்
  நிரம்பியதுமாகிய பெரிய குளிர்ந்த பொய்கையின்  பக்கங்களைச்
  சூழ்ந்தென்க,
 
(விளக்கம்) இட்டிகை-செங்கல். படுகால் - படி. உத்தரகோண
  மருங்கின் என்க. அது வடகிழக்கு என்க. நத்தினம் - சங்குகள்.
  மணி-முத்து. குலாய்-சூழ்ந்து.