பக்கம் எண் :

பக்கம் எண்:513

உரை
 
3. மகத காண்டம்
 
27. பறை விட்டது
 
           கருதிய தெல்லாங் கால்வ லிளையரின்
           உருவ வெண்குடை யுதயணற் குணர்த்த
 
                   (வருடகாரன் செயல்)
              41 - 42 : கருதிய ......... உணர்த்த
 
(பொழிப்புரை) இவ்வாறு ஆருணியின் உடன்பாடுணர்ந்த வருடகாரன் ஈண்டுத் தாங்கள் கருதிய செயல்களையெல்லாம் தன்னுடைய கால்வல் இளைஞரின் வாயிலாய் அழகிய கொற்ற வெண்குடையையுடைய உதயண மன்னனுக்கு அறிவித்துவிடுதலாலே; என்க.
 
(விளக்கம்) கருதியதெல்லாம் - போர்த்தொழில்பற்றி ஆருணியும் தானும் கருதியிருக்கின்ற செயல் முறைகளையெல்லாம் என்க. உருவம் - அழகு.