பக்கம் எண் :

பக்கம் எண்:520

உரை
 
3. மகத காண்டம்
 
27. பறை விட்டது
 
            கொள்ளா ரழிவினைக் கூறு மிவையென
            வள்ளிதழ் நறுந்தார் வருட காரன்
            ஊக்கங் கொளுவ வாக்கங் கருதி
 
                   (வருடகாரன் கூற்று)
             87 - 89 : கொள்ளார்.........கொளுவ
 
(பொழிப்புரை) அவ்வமைச்சன் நாவினையடக்கி, ஆருணி மன்னனைப் பார்த்து. ''பெருமானே! இத்தீய நிமித்தங்கள் நம் பகைவரது அழிவினையே குறிப்பனவாம்'' என்று பெரிய இதழையுடைய நறிய மலர் மாலையணிந்த அவ்வருடகாரன் அம்மன்னனுக்கு ஊக்கமுண்டாக்க; என்க.
 
(விளக்கம்) கொள்ளார் - பகைவர். இவை - இந்நிமித்தங்கள். கொளுவ - கொள்விக்க