பக்கம் எண் :

பக்கம் எண்:525

உரை
 
3. மகத காண்டம்
 
27. பறை விட்டது
 
            தாரணி மார்ப னாருணி யரசனும்
     125     காந்தா ரகனுங் கழற்காற் சாயனும்
            தேந்தார்ச் சூரனுந் திறற்பம சேனனும்
            இந்நாற் றலைவரு மெரிகான் றெதிர்ப்பச்
            செந்நே ராகச் செல்வுழி யெதிரே
 
                  (ஆருணியின் செயல்)
               124 - 128 : தாரணி.........எதிரே
 
(பொழிப்புரை) மாலையணிந்த மார்பினையுடைய ஆருணியரசனும் காந்தாரகனும் வீரக் கழல் கட்டிய காலையுடையசாயனும் தேன் பொருந்திய மாலையணிந்த சூரனும் ஆற்றல் மிகுந்த பிரம சேனனும் என்னும் இந்த நான்கு பெருந்தலைவர்களும் கண்களில் தீக் காலும் படி வந்து எதிர்ப்ப, ஆருணியரசன் நேரே வந்த பொழுது; என்க.
 
(விளக்கம்) ஆருணியரசனும் காந்தாரகனும் சாயனும் சூரனும் பிரமசேனனும் ஆகிய இந்த நாலு தலைவர்களும் உதயணன் முதலியோரை எதிர்க்க, ஆருணி உதயணனுக்கு எதிரே வரும்பொழுது என்க. பமசேனன் - பிரமசேனன்.