பக்கம் எண் :

பக்கம் எண்:526

உரை
 
3. மகத காண்டம்
 
27. பறை விட்டது
 
             காந்தா ரகனைக் கடக பிங்கலர்
     130     தேந்தார் மார்பந் திறப்ப வெய்ய
             ஆழ்ந்த வம்போ டழிந்தன னாகி
             வீழ்ந்தன னவனும் வீழ்ந்த பின்னர்
 
                   (கடகபிங்கலர் செயல்)
              129 - 132 : காந்தாரகன்.........பின்னர்
 
(பொழிப்புரை) அந்த நான்கு தலைவர்களுள் வைத்துக் காந்தாரகன் என்பவனைக் கடகபிங்கலர் எதிர்த்து அவனுடைய தேன் மணக்கும் மலர்மாலையணிந்த மார்பினைத் தம் அம்புகளாலே திறவாநிற்ப, அவனும் கொடியனவாய்த்தன் மார்பின்கண் அழுந்திய அந்த அம்புகளோடே நிலத்தில்வீழ்ந்து இறந்தான், அவன் இறந்த பின்னர்......என்க.
 
(விளக்கம்) மார்பத்தை அம்புகளாலே திறப்ப என்க. வெய்யனவாய் மார்பில் அழுந்திய அம்போடு என்க. 133 ஆம் அடி அழிந்தொழிந்தது.