உரை |
|
3. மகத காண்டம் |
|
27. பறை விட்டது |
|
பெய்கழ லாருணி பிறந்த
நாளுட்
செவ்வாய் விருச்சிகஞ் சென்றுமே னெருங்க
135 ஆற்றல் சான்ற வடல்வே
லாருணி ஏற்றோர்
யாவ ரீண்டுவந் தெதிர்க்கெனச்
|
|
(ஆருணியின்
கூற்று)
133 - 136 : பெய்.........எதிர்க்கென |
|
(பொழிப்புரை) வீரக்கழல் கட்டிய அந்த ஆருணி
மன்னன், பிறந்தநாளும், செவ்வாய்க்கிழமையும், விரிச்சிக ஓரையும், ஒன்று கூடிச்
செறிதலாலே போராற்றல் மிக்க கொல்லும் வேலையுடைய அந்த ஆருணிமன்னன் ''இங்கே
என்னோடு எதிர்க்கத் தகுந்தோர் யார்? அவர் வந்து என்னோடு எதிர்த்திடுக!'' என்று
அறைகூவ; என்க. |
|
(விளக்கம்) ஒருவன் பிறந்த நாண்மீனும் செவ்வாய்க்கிழமையும் விரிச்சிகஓரையும் ஒன்றுகூடின்
அவன் இறந்துபடுவன் என்பது கருத்து. பிறந்த நாள்மீன் (நட்சத்திரம்). ஏற்றோர் -
தகுதியுடையோர். |