உரை |
|
3. மகத காண்டம் |
|
27. பறை விட்டது |
|
145 இடுகளி
யானை யெதிர்கண்
டாங்குருத் தடுதிற
லாருணி யவனுரை பொறாஅன்
பன்மயி ரணிந்த பத்திச்
சேடகம்
மின்னொளிர் வாளொடு பின்னவன் வாங்கக்
|
|
(ஆருணியின்
செயல்)
145 - 148 : இடுகளி............வாங்க |
|
(பொழிப்புரை) அவ்வுதயண மன்னனைக் கண்ட
போர்த்திறன் மிக்க ஆருணி மதமூட்டப்பெற்ற ஒரு களிற்றியானையைத் தன் எதிர்கண்ட
மற்றொரு களிற்றியானைபோல அவ்வுதயணனுடைய மொழிகளைப் பொறானாய்ப் பலவாகிய
மயிரையுடைய தோல் போர்த்த சித்திரப்பத்தியையுடைய கேடகத்தையும், மின்னல் போல
ஒளிருகின்ற வாளையும் கைகளில் பற்றாநிற்ப; என்க. |
|
(விளக்கம்) இடுகளி யானை - அதிமதுரத்தழை முதலியவற்றையிட்டு மதமூட்டப்பெற்ற யானை என்க.
மற்றொரு யானை - எதிர்கண்டாங்கென வருவித்தோதுக. அவன் : உதயணன். மயிரையுடைய தோல்
அணிந்த என்க. பத்தி - வரிசை. சித்திரப் பத்தி என்க. சேடகம் - கேடகம் ; கிடுகு.
பின்னவன் - பிற்கூறப்பட்ட ஆருணி. |