உரை |
|
3. மகத காண்டம் |
|
27. பறை விட்டது |
|
வரிகழ
னோன்றாள் வருட
காரன்
இரியற் படையொ டியைந்தொருங்
கீண்டிக் கொடிக்கோ
சம்பிக் கொற்ற வாயில் 195
அடுத்தனன் குறுகி யஞ்சன்மின்
யாவிரும் வடுத்தீர்
பெரும்புகழ் வத்தவர் கோமான்
படுத்தனன் கண்டீர் பாஞ்சால
ராயனை
அடைத்தனிர் வையா தகற்றுமின் கதவென
|
|
(வருடகாரன்
செயல்)
192 - 198 : வரிகழ.........என |
|
(பொழிப்புரை) வரிந்து கட்டிய வீரக் கழலையுடைய வலிய
முயற்சியையுடைய வருடகாரன் உதயணன் படைக்கு உடைந்தோடிய ஆருணியின் படைமறவரோடு கூடிக்
கொடியையுடைய கோசம்பி நகரத்தின் வெற்றி பொருந்திய கோபுர வாயிலை எய்தி, ஆங்குள்ள
மாந்தர்களை யணுகி, ''நகர் வாழ் மக்களே ! நீவிரெல்லாம் அஞ்சாதே கொண்மின் !
குற்றமற்ற பெரும்புகழையுடைய இவ்வத்தவ நாட்டு மன்னனாகிய உதயணன் நம்பகை மன்னனாகிய
ஆருணியைக் கொன்றனன். ஆதலின் அவ்வுதயண மன்னனுடைய மறவரும் பிறரும் நுழைதற்பொருட்டு
இக் கோபுரவாயிற் கதவுகளை அடைத்து வையாதேயுங்கள் ! திறந்து விடுமின்'' என்று கூறா
நிற்ப, என்க. |
|
(விளக்கம்) வரிகழல் : வினைத்தொகை. இரியற் படை - உடைந்தோடிய படை. இஃது ஆருணியின்
படை. வடு - குற்றம். கோமான் : உதயணன். படுத்தனன் - கொன்றனன். கதவையடைத்து வையாது
அகற்றுமின் என்க. |