பக்கம் எண் :

பக்கம் எண்:538

உரை
 
3. மகத காண்டம்
 
27. பறை விட்டது
 
           வென்றியொடு புக்கு நின்ற மறவருட்
           டலைவ னாகிய தொலைவில் விழுச்சீர்ப்
           பாடுசால் சிறப்பிற் பாஞ்சால ராயன்
     210    கண்மணி யன்ன திண்ணறி வாளன்
           கும்பனென் போனை வெம்ப நூறி
 
                      (இதுவுமது)
               207 - 211 : வென்றி.........நூறி
 
(பொழிப்புரை) இவ்வாறு வெற்றியோடு நகரத்திற்குள் புகுந்து நின்ற மறவருள் வைத்து அழியாத பெரும் புகழையும் பெருமை பொருந்திய சிறப்பையும் உடைய ஆருணி மன்னனுடைய கண்மணி போன்ற நட்புடையவனும், திண்ணிய அறிவாளனும், ஆகிய கும்பன் என்னும் படைத்தலைவனைக் கண்டு அவன் மனம் வெம்பும்படி கொன்று ; என்க.
 
(விளக்கம்) வென்றியோடு புக்கு நின்ற மறவர் என்றது உதயணன் மறவர்களை. கும்பன் என்பவன் ஆருணியின் படைத் தலைவன். இவன் புறங்கொடுத்தோடி உதயணன் படை மறவர்களுள் புகுந்து கொண்டு நின்றான் என்பதும், அவனை உதயணன் மறவர் கண்டு பிடித்துக் கொன்றனர் என்பதும் இதன்கண் கூறப்பட்டன