உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
1. கொற்றங்கொண்டது |
|
தரும
தத்தனைத் தோண்முதல் பற்றிப்
10 பரும யானையொடு பாஞ்சால
ராயனை வெங்களத்
தட்ட வென்றி
யிவையென நெய்த்தோர்ப்
பட்டிகை யாக
வைத்துப் பத்தூர்
கொள்கெனப் பட்டிகை கொடுத்து
|
|
(இதுவுமது) 9 - 13
: தரும...........கொடுத்து
|
|
(பொழிப்புரை) பின்னர்த் தருமதத்தன் என்னும் அமைச்சனை,
மகிழ்ந்து நோக்கி அவனுடைய தோள்களைப் பற்றிக் கொண்டு, "அன்பனே ! நீ ஒப்பனையுடைய
யானையோடு என் பகைவனாகிய ஆருணிமன்னனை வெவ்விய போர்க்களத்திலே கொன்று வீழ்த்திய
வெற்றியின் பொருட்டு நினக்கு யான் வழங்கும் பொருள் இவைகாண்" என்று கூறி
குருதிப்பட்டிகையாக இந்தப் பத்தூர்களையும் நீ ஏற்றுக்கொள்க என்று கூறிப் பட்டிகையும்
எழுதிக்கொடுத்து; என்க.
|
|
(விளக்கம்) தருமதத்தன் : தருசகன் அமைச்சருள் ஒருவன்.
பாஞ்சாலராயன் - ஆருணிமன்னன். வென்றிக்கு இவை கைம்மாறு என்று என்க. நெய்த்தோர்ப்
பட்டிகை - போர்க்களத்தே பகைவரை எதிர்த்து நின்று தங்குருதியை சிந்திக்கொள்ளும்
வெற்றிக்குக் கைம்மாறாகச் செப்புப் பட்டயத்தில் எழுதி வழங்கும் முற்றூட்டு என்க.
பட்டிகை - பட்டயம்.
|