| (விளக்கம்) செங்கதிர்ச்
செல்வன் - ஞாயிறு. எழுச்சி - தோற்றம். பாடு - மறைவு. திங்கள் - மாதம். நாள் -
விண்மீன். ஞாயிறு எழுதலையும் இஃதின்ன திங்கள் இஃது இன்ன நாள் என்னும் வேற்றுமையைத்
தானும் தெளியாதவனாய் இருந்தான் என்பது கருத்து. இங்ஙனமே,
"போகப் பெருநுகம் பூட்டிய
காலை, மாக விசும்பின் மதியமு
ஞாயிறும் எழுதலும் படுதலும் அறியா இன்பமொடு" (2.
9: 183-5)
என முன்னும் வந்தமை யுணர்க. இன்பக்கிழவன் : காமவேள். மகதன் : தருசகன்.
அவளொடு - அப்பதுமாபதியோடு. மாதரொடு - அப்பதுமாபதியோடு. பயந்த - பயன்தந்த.
பாயினன் - பரப்பினான். வளமுறச் செய்தான் என்றவாறு.
2. நாடு பாயிற்று முற்றிற்று.
|